சென்னை: பல்வேறு வகையிலான பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் விதத்தில் GANDIV-V என்கிறஒத்திகை பயிற்சியை சென்னையில் நடத்த தேசிய பாதுகாப்பு படை திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தஒத்திகை பயிற்சி வரும் 15-ம் தேதிமுதல் 17-ம்தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இதையொட்டி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘டேபிள் டாப் பயிற்சி’ என்கிற கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமை வகித்து சிறப்பு ஒத்திகைபயிற்சி குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு படை, உள்துறை, பொதுத்துறை, மாநகராட்சி, கடலோர பாதுகாப்பு குழு, ரிசர்வ் வங்கி, ரயில்வே, விமான நிலையம், பெருநகர போக்குவரத்து போலீஸார், காவல்துறை உள்பட 28 துறைகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.