சென்னை: செப்.14-ம் தேதி தேமுதிகவின் 19-ம்ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொதுக்கூட்டங்கள்: தேமுதிகவின் 19-ம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு செப்.14-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் தொடக்க நாள், கட்சியின் கொள்கை விளக்கம் மற்றும் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும். கட்சி தொடக்க நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றுவதோடு, நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஒருங்கிணைந்த மாவட்டமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை 4 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.