தமிழகம்

எர்ணாகுளம் - சென்னை எழும்பூர் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

செய்திப்பிரிவு

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்:06044), வரும் 3ம் தேதி இரவு 8.25 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, மறு நாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

சென்னை எழும்பூர் - எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 06043), வரும் 4-ம் தேதி மதியம் 2.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில்கள், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT