தருமபுரி/மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 23-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, கடந்த 24-ம் தேதி காலை அளவீட்டின்போது விநாடிக்கு 8,500 கனஅடியாகக் குறைந்தது.
இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்துஅதிகரித்திருந்தது. அதேநேரத்தில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,583 கனஅடியாகக் குறைந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 7,978 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 5,583 கனஅடியாக சரிந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 54.91 அடியாகவும், நீர்இருப்பு 21.04 டிஎம்சியாகவும் இருந்தது.