தமிழகம்

ஆளுநர் மீது அவதூறு: உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநரை அவதூறாக பேசியஉதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதய நிதி, தமிழக ஆளுநரை அவதூறாகப் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுக பல தேர்தல்களில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. அப்போது தமிழக மக்கள்திமுகவினர் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? ஒரு மாநிலத்தின் அமைச்சர், அதிலும் முதல்வரின் மகன், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநரை தரம் தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. மக்களை தூண்டிவிடும் முறையில் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும்.

          
SCROLL FOR NEXT