ஆவின் பன்னீர் 
தமிழகம்

சென்னை, புறநகர் பகுதிகளில் ஆவின் பன்னீர், பாதாம் மிக்ஸ் விலை உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பன்னீர் மற்றும் பாதாம் மிக்ஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 1 கிலோ பன்னீர் 450 ரூபாயிலிருந்து 550 ரூபாயாகவும், 500 கிராம் பன்னீர் 250 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 கிராம் பன்னீர் 100 ரூபாயிலிருந்து 120 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது போன்று, 200 கிராம் பாதாம் மிக்ஸ் விலை 100 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT