அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கணக்கில் எவ்விதப் பணபலன்களையும் வழங்காத தமிழக அரசையும் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தையும் கண்டித்து, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அரசுப் போக்குவரத்து கழகத் தலைமை அலுவலகம் முன்பு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணைத்தலைவர் சம்பந்தம் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர்..
அப்போது ஓய்வூதியத்தை 1ம் தேதி வழங்கவேண்டும். மருத்துவக்காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஒரு கட்டத்தில் விழுப்புரம் - திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 1000க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.