தமிழகம்

முட்டை மீது சிறுவர்கள் யோகாசனம் செய்து அசத்தல்

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் பெண் குழந்தைகளுக்கு வலிமையும், தைரியமும் தேவைஎன்பதை வலியுறுத்தி, கோவில்பட்டியில் சுவாமி விவேகானந்த யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் விழிப்புணர்வு யோகாசன நிகழ்ச்சி நடந்தது.

ஸ்கேட்டிங் கழக மாநிலஆலோசகர் கே.பி.ராஜகோபால் தலைமை வகித்தார். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராஜன், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி கவுதமன் தொடங்கி வைத்தார்.

சிறுமி ரவீணா முட்டைகள் மீது படுத்திருக்க, அவர் மீது அமர்ந்து சிறுவன் சாய் விஸ்வா ஆசனங்கள் செய்தார். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இருவருக்கும் நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி பரிசு வழங்கினார்.

SCROLL FOR NEXT