சென்னை: ராணிப்பேட்டை சிப்காட்டில் ரூ.145 கோடி முதலீட்டில் எஸ்ஓஎல் இந்தியா நிறுவனத்தின் ஆலை விரிவாக்க திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொருளாதாரம், தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்த்து,லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்யவும், 2030-ம் ஆண்டுக்குள் தமிழக பொருளாதாரத்தை ஒருடிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு அரசு எடுத்து வருகிறது.
அரசு பொறுப்பேற்றது முதல்இதுவரை ரூ.2.97 லட்சம் கோடிமுதலீட்டில் 4.15 லட்சம் பேருக்குவேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 240 திட்டங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இத்தாலியின் எஸ்ஓஎல் எஸ்பிஏ - இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் எஸ்ஓஎல்இந்தியா (பழைய பெயர் சிக்ஜில்சால் இந்தியா). முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு பயன்படும் ஆக்சிஜன், மருத்துவ ஆக்சிஜனை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
தமிழகத்தில் தஞ்சாவூர்மாவட்டம் புதுக்குடி மற்றும் ராணிப்பேட்டையில் இதன் உற்பத்தி மையங்கள் உள்ளன.
தற்போது இந்த நிறுவனம் ரூ.145 கோடி முதலீட்டில் ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்கா நிலை 3-ல் திரவ மருத்துவ ஆக்சிஜன், தொழில் ஆக்சிஜன், திரவ நைட்ரஜன், திரவ ஆர்கான்உற்பத்தி செய்ய அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின்நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த விரிவாக்கம் மூலம் இதன்தினசரி உற்பத்தி திறன் 80டன்னில் இருந்து 200 டன் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.
இந்த நிகழ்வில், அமைச்சர் டிஆர்பி.ராஜா, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன்,தமிழ்நாடு தொழில் வழிகாட்டிநிறுவன மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, எஸ்ஓஎல் இந்தியா நிறுவன தலைவர் குலியோலாஃபுமாகாலி ரொமாரியோ, இந்திய செயல்பாடுகளின் இயக்குநர் எஸ்வி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.