சென்னை: பதிவுத்துறையில் நிர்வாக காரணங்கள் அடிப்படையில், சென்னைஉள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 36 மாவட்ட பதிவாளர்களை இடமாற்றம் செய்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை தி.நகர் மாவட்ட பதிவாளர் நிலையில் உள்ள சார்பதிவாளர் கே.செந்தில்நாதன், தஞ்சை மாவட்ட பதிவாளராகவும், செய்யாறு மாவட்ட பதிவாளர்ஜி.அறிவழகன், செங்கல்பட்டுக்கும், வடசென்னை மாவட்ட பதிவாளர் ஏ.கலைச்செல்வி செய்யாறுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறாக மொத்தம் 36 மாவட்டப் பதிவாளர்கள் தமிழகம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளனர்.