சென்னை: தலைமைச் செயலர் வெ.இறையன்பு இன்றுடன் ஓய்வு பெறவுள்ளார்.
இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளிக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: மாணவர்கள் மின்னணு உபகரணங்களில் அதிகமாக வாசிப்பதால், புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பொது அறிவுதொடர்பான செய்திகள் அவர்களுக்கு அதிகமாக தெரிவதில்லை. வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்த வேண்டும். அதில் மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம்.
இதன்மூலம் வாசிப்பு மேம்படுவதுடன் தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். சிறந்த முறையில் நூலைமதிப்புரை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதோடு, இதில் பங்கேற்கும்அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களை தந்து ஊக்குவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.