தமிழகம்

அடுத்த ஆண்டு கோடை காலத்துக்கு முன்பாக 50% மின் கேபிள்கள் புதிதாக மாற்ற முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: பழுதடைந்த கேபிள்களால் ஏற்படும் மின்தடையை சமாளிக்க,அடுத்தாண்டு கோடைக்காலத்துக்கு முன்பாக 50 சதவீத கேபிள்கள் புதிதாக மாற்றி அமைக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள மின்சார கேபிள்கள் பலஅவற்றின் செயல்பாட்டு காலத்தைக் கடந்துள்ளது. சில இடங்களில் கேபிள்கள் சேதம் அடைந்துள்ளன. அடுத்த ஆண்டு கோடைக் காலத்துக்குள் 50 சதவீதகேபிள்கள் புதிதாக மாற்றி அமைக்கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT