விபத்துக்குள்ளான பேருந்துகள் 
தமிழகம்

கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் பலி; 80 பேர் படுகாயம்.

ந.முருகவேல்

விருத்தாசலம்: கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 80 பேர் படுகாயமடைந்தனர்.

பண்ருட்டி - கடலூர் சாலையில் மேல்பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 80 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT