தமிழகம்

ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ட்ரோன் பறக்க இன்று முதல் 4 நாட்கள் தடை

செய்திப்பிரிவு

சென்னை: ஜி20 நாடுகள் அமைப்பின் பெண்கள் பிரதிநிதிகள் மாநாடு,சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் வரும் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி சென்னையில் இன்று (14-ம் தேதி) முதல் வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆள் இல்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தடை விதித்துள்ளார்.

SCROLL FOR NEXT