பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் வேருடன் வயலில் சாய்ந்துள்ள மக்காச்சோள பயிர்கள்.

 
தமிழகம்

பெரம்பலூர் அருகே சூறைக்காற்றுடன் மழை: 100 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: கடும் சூறைக்​காற்​றுடன் மழை பெய்​த​தில் பெரம்​பலூர் மாவட்​டம் வேப்​பந்​தட்டை வட்​டத்​துக்கு உட்​பட்ட மலை​யாளப்​பட்டி கிராமத்​தில் 100 ஏக்​கர் மக்​காச் ​சோளம் மற்​றும் 20 ஏக்​கர் வாழை மரங்​கள் வயலில் சாய்ந்து சேதமடைந்​துள்​ளன.

பெரம்பலூர் மாவட்​டத்​தில் நேற்று முன்​தினம் சூறைக்​காற்​றுடன் பரவலாக மழை பெய்​தது. இதனால், பல நாட்​களாக கடுமை​யாக நிலவி வந்த வெப்​பம் தணிந்து குளிர்ச்சி நில​விய​தால் மக்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர். அதேவேளை​யில், சில இடங்​களில் வேளாண் பயிர்​கள் சேதமடைந்​த​தால் விவ​சா​யிகள் கவலை அடைந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், வேப்​பந்​தட்டை வட்​டம் மலை​யாளப்​பட்டி கிராமத்​தில் சூறைக்​காற்​றுடன் பெய்த மழை​யால் 100 ஏக்​கர் மக்​காச்​சோள பயிர்​கள், 20 ஏக்​கர் வாழை மரங்​கள் வயலில் சாய்ந்து​விட்​டன. இதனால், பல லட்ச ரூபாய் இழப்​பீடு ஏற்​பட்​டு உள்​ள​தாக விவ​சா​யிகள் கவலை தெரிவிக்​கின்​றனர்.

இதுகுறித்து தமிழக விவ​சா​யிகள் சங்க மாவட்​டத் தலை​வர் வி.நீல​கண்​டன் கூறியது: பெரம்​பலூர் மாவட்​டத்​தில் பரவலாக மக்​காச்​சோளம் சாகுபடி செய்​யப்​பட்​டு, அவை அறு​வடை காலத்தை நெருங்​கி​ இருந்​தன.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் சூறைக்​காற்​றுடன் பெய்த பலத்த மழை​யில் 100 ஏக்​கர் மக்​காச்​சோள பயிர்​கள் வேருடன் வயலில் சாய்ந்​து​விட்​டன. இது​வரை ஏக்​கருக்கு ரூ.43 ஆயிரம் வரை செல​வழித்​துள்ள நிலை​யில் கடும் சேதம் ஏற்​பட்​டுள்​ளது.

இதே​போல, 20 ஏக்​கர் வாழை மரங்​களும் சாய்ந்​து​விட்​டன. பயிர்​கள் பாதிப்பு குறித்து அரசு கணக்​கெடுத்​து, பாதிக்​கப்​பட்ட விவ​சா​யிகளுக்கு உரிய இழப்​பீடு வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT