வாக்களிக்க சொந்த ஊருக்குச் செல்வதற்காக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று குவிந்த பயணிகள்.

 
தமிழகம்

தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததால் பயணிகள் அவதி

செய்திப்பிரிவு

சென்னை: தேர்​தலில் வாக்​களிப்​ப​தற்​காக, சென்​னை​யில் இருந்து 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொந்த ஊர்​களுக்கு புறப்​பட்​டுச் சென்​றுள்​ளனர். ஆம்னி பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​ட​தால் பயணி​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகினர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் இன்று நடை​பெறுகிறது. சென்​னையைப் பொருத்​தவரை, வெளி மாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​கள் அதிக அளவில் வசிக்​கின்​றனர். அவர்​கள் சென்​னை​யில் தங்கி வியா​பாரம் உள்​ளிட்ட பல்​வேறு வர்த்​தகப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். ஏராள​மான மாணவர்​களும் இங்கு தங்கி உயர்​கல்வி பயின்று வரு​கின்​றனர். அது​மட்​டுமின்​றி, ஏராள​மானோர் தகவல் தொழில்​நுட்​பத் துறை உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

சென்​னை​யில் நீண்ட கால​மாக வசித்​து​வரும் குடும்​பஸ்​தர்​கள் பலரும் சமீபத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​யின்​போது, தங்​கள் வாக்​கு​களை சென்​னைக்கு மாற்​றிக் கொண்​டுள்​ளனர். திரு​மணம் ஆகாதவர்​கள், விடு​தி​களில் தனி​யாக தங்​கி​யுள்​ளவர்​கள், கல்​லூரி மாணவர்​கள் உள்​ளிட்​டோர் தொடர்ந்து தங்​களது வாக்​கு​களை சொந்த ஊரிலேயே வைத்​துள்​ளனர். தீபாவளி, பொங்​கலுக்​குச் செல்​வது​போல, தேர்​தலின்​போதும் இவர்​கள் சொந்த ஊருக்​குச் சென்று தங்​கள் வாக்​கு​களை பதிவு செய்து வரு​கின்​றனர்.

அந்த வகை​யில், இவர்​கள் சொந்த ஊருக்​குச் சென்று வாக்​களிக்க ஏது​வாக, அரசு சார்​பில் சிறப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன்​படி, சென்​னை​யில் இருந்து தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களுக்​கும் அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​கள் சார்​பில் கடந்த 21-ம் தேதி முதல் இன்று வரை 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

சென்னை எழும்பூரில் ரயிலில் ஏறுவதற்காக திரண்ட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம்.

அதே​போல, தெற்கு ரயில்வே சார்​பில் மதுரை, கோவை உள்​ளிட்ட இடங்​களுக்கு சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​பட்​டன. அனைத்து முக்​கிய ரயில் நிலை​யங்​களில் நின்று செல்​லும் வித​மாக இந்த ரயில்​கள் இயக்​கப்​பட்​டன. கடந்த 2 நாட்​களாக இயக்​கப்​பட்ட அனைத்து பேருந்​துகள், ரயில்​களி​லும் பயணி​கள் கூட்​டம் நிரம்பி வழிந்​தது. இதில் இடம் கிடைக்​காதவர்​கள் ஆம்னி பேருந்​துகள், சொந்த வாக​னங்​களில் புறப்​பட்​டுச் சென்​றனர்.

கடந்த 21-ம் தேதி போக்​கு​வரத்து துறை சார்​பில் இயக்​கப்​பட்ட 3,431 பேருந்​துகளில் 1.90 லட்​சம் பேர், ரயில்​களில் 1.50 லட்​சம் பேர், ஆம்னி பேருந்​துகள், சொந்த வாக​னங்​களில் ஒரு லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்​டனர்.

நேற்று 5,500-க்​கும் மேற்​பட்ட பேருந்​துகள் இயக்​கப்​பட்டு அதில் 3 லட்​சம் பேரும், ரயில்​களில் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோரும் பயணம் மேற்​கொண்​டுள்​ளனர். மொத்​த​மாக கடந்த 2 நாட்​களில் அரசுப் பேருந்​துகள், ரயில்​கள், ஆம்னி பேருந்​துகள், தனி​யார் வாக​னங்​களில் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் வாக்​களிப்​ப​தற்​காக சொந்த ஊருக்கு புறப்​பட்​டுச் சென்​றுள்​ளனர்.

இதே​போல, திருச்​சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை உள்​ளி்ட்ட நகரங்​களில் இருந்​தும் பல்​வேறு பகு​தி​களுக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன. வாக்​குப்​ப​திவு முடிந்த பிறகு, இவர்​கள் சென்னை உள்​ளிட்ட நகரங்​களுக்கு திரும்ப வசதி​யாக இன்​றும், நாளை​யும் கூடு​தல் பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

ஆம்னி பேருந்​தில் கூடு​தல் கட்​ட​ணம்: இதற்​கிடையே, ஆம்னி பேருந்​துகளில் கூடு​தல் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

ஆம்னி பேருந்​துகளை முன்​ப​திவு செய்​யும் இணை​யதளங்​கள், செயலிகளில் ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் நிர்​ண​யித்த அதி​கபட்ச கட்​ட​ணத்​தை​விட ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கூடு​தலாக கட்​ட​ணம் நிர்​ண​யம் செய்​யப்​பட்​டிருந்​தது.

இதனால் மக்​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகினர். போக்​கு​வரத்து துறை மற்​றும் ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்​கம் சார்​பில் அறிவிக்​கப்​பட்ட தொலைபேசி எண்​களைத் தொடர்பு கொண்டு பலரும் புகார் தெரி​வித்த நிலை​யில், பயணி​களிடம் கூடு​தலாக வசூலிக்​கப்​பட்ட தொகை திருப்பி வழங்​கப்​பட்​டுள்ளது.

இதுகுறித்து சங்​கத்​தின் தலை​வர் அன்​பழகன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘சங்​கம் நிர்​ண​யித்த அதி​கபட்ச கட்​ட​ணத்​தை​விட கூடு​தலாக சிலர் ஆன்​லைனில் டிக்​கெட் கட்​ட​ணங்​களை வெளி​யிட்​டிருந்​தனர். இதையடுத்​து, தமிழக அரசுத் துறை​யினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்​கப்​பட்​டு, அந்த கட்​ட​ணங்​கள் உடனடி​யாக குறைக்​கப்​பட்​டன.

சில பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​ட​தாக வந்த புகார்​களின் அடிப்​படை​யில், பயணி​களிடம் கூடு​தலாக வசூலிக்​கப்​பட்ட தொகை திருப்பி வழங்​கப்​பட்​டது. அதிக கட்​ட​ணம் வசூலிக்​கும் நிறு​வனங்​கள் மீது அரசு சார்பாக நடவடிக்​கைகள்​ எடுக்​கப்​பட்​டு வரு​கின்​றன’ என்​று கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT