அழகு சேர்ப்பவை வண்ணங்களும் அலங்காரங்களும்தான் இல்லையா? அழகான வீடு கட்டி நாம் விரும்பும் வண்ணங்களில் வண்ணம் பூசுவோம். பிடித்த வடிவங்களில் அறைக்கலன்கள் வாங்கி வீட்டை அழகுப்படுத்துவோம். அதெல்லாம் சரிதான். வீட்டுக்கு உண்மையான அழகைத் தேடித் தருவது இயற்கைதான். முன்பெல்லாம் தோட்டம் வைக்க இடம் இருக்கும் அதில் நமக்கு விருப்பமான செடிகளை வைத்து அழகு பார்ப்பார்கள். இன்றைக்கு இட நெருக்கடியில் நாம் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் குறுகிப்போய்விட்டோம். என்றாலும் அந்த இடத்துக்குள் நாம் கொடிகள் வளர்க்கலாம்.
கொடிகள் என்றதும் பந்தல் கட்ட வேண்டும் எனக் கற்பனை செய்ய வேண்டாம். இவற்றுக்காகப் பிரத்தியேகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த இடங்களில் படர வேண்டுமென நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் படரத் தோதான வசதிகளை ஏற்படுத்திவிட்டால் போதும். போதுமான நில வசதி இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை, பெரிய தொட்டிகளில்கூட விதைகளைத் தூவிக் கொடிகளை வளர்த்துவிடலாம்.
பூக்களைத் தரும் கொடிகளில் இரு வகைகள் உள்ளன. சில வகைக் கொடிகளில் தண்டுக்கு நெருக்கமாகப் பூ பூக்கும், சிலவற்றில் பூக்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்துத் தொங்கும். முதல் வகைக் கொடிகளைத் தூண்களில் படரவிடலாம். தூணோடு தூணாக அழகிய திரை போலப் படர்ந்து சூழலை அழகுபடுத்தும். இரண்டாம் வகைக் கொடிகளைக் கூரைமீது படர விடலாம். படபடவெனப் பரவி கூரையில் பூக்களின் தோரணங்கள் கண்ணைப் பறிக்கும்விதமாக மலர்ந்து பார்ப்போரைக் கவரும்.
பூக்களைத் தரும் கொடிகளில் இரு வகைகள் உள்ளன. சில வகைக் கொடிகளில் தண்டுக்கு நெருக்கமாகப் பூ பூக்கும், சிலவற்றில் பூக்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்துத் தொங்கும். முதல் வகைக் கொடிகளைத் தூண்களில் படரவிடலாம். தூணோடு தூணாக அழகிய திரை போலப் படர்ந்து சூழலை அழகுபடுத்தும். இரண்டாம் வகைக் கொடிகளைக் கூரைமீது படர விடலாம். படபடவெனப் பரவி கூரையில் பூக்களின் தோரணங்கள் கண்ணைப் பறிக்கும்விதமாக மலர்ந்து பார்ப்போரைக் கவரும்.
செங்குத்தான இடங்களுக்கா அல்லது கிடைமட்டப் பகுதிகளுக்கா என்பதைப் பொறுத்துத் தேவையான கொடிகளின் விதைகளை வாங்கிக் கொடிகளை வளர்த்து வீட்டை அழகுப்படுத்தலாம். வீடுகளின் ஜன்னல்கள், கதவுகள், வீட்டின் முன்புறச் சுவர்கள் போன்ற இடங்களிளெல்லாம் தேவைக்கேற்ப கொடிகளைப் படர விட்டு வீட்டை வண்ணமயமாக்கலாம். பூக்கள் மிகுந்த கொடிகள் வண்ணமயமான தோற்றத்தைத் தருவதுடன் நறுமணத்தையும் பரப்பும். மேலும் இதுபோன்ற கொடிகள் நம் இடத்தை அழகாக மாற்றிவிடும்.