# வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆப்பிளைத் தோல் சீவி, நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பொடி இரண்டையும் கலந்து முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் ஊறவிட்டுக் கழுவிவந்தால் சருமம் மிருதுவாகும்.
# முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருந்தால் தக்காளியைக் கூழாக்கிப் பூசலாம். ஆப்பிளைச் சிறு துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவிவந்தாலும் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசை குறையும்.
# மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவு பெறும்.
# நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தைப் பிசைந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவினால் சருமம் மிருதுவாகும்.
# எலுமிச்சைச் சாற்றைப் பஞ்சில் தொட்டு முகத்திலும் கழுத்திலும் தடவிவந்தால் எண்ணெய்ப் பசை நீங்கும்.
# உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கேரட்டை நன்றாக அரைத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகம், கழுத்து, கைகளில் தடவிக் கழுவினால் பொலிவாகும்.
# போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன் பழங்களை அதிகமாகச் சாப்பிட்டுவந்தால் உடலின் வறட்சி நீங்கும்.
- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.