விளையாட்டு

போட்டி நடைபெறும் நாட்களில் தோனி ஏன் களத்துக்கு வருவதில்லை? - மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சேப்​பாக்​கத்​தில் இன்று நடை​பெறும் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்​தி​லும் தோனி களமிறங்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் இல்​லை. நடப்பு சீசனில் கணுக்​காலில் காயம் அடைந்துள்ள அவர், இது​வரை களமிறங்​க​வில்​லை. பேட்​டிங் மற்றும் விக்​கெட் கீப்​பிங் பயிற்​சி​யில் தோனி தீவிரம் காட்டி வருகிறார்.

அதேவேளை​யில் ரன்​கள் ஓடு​வ​தில் தோனி சிரமத்தை சந்​தித்து வரு​வ​தாக தெரி​கிறது. இதன் காரண​மாகவே தோனி களமிறங்குவது தள்​ளிப் போகிறது. போட்​டிக்கு முந்​தைய நாட்களில் களத்​தில் பயிற்​சி​யில் ஈடுபடும் தோனி, சக அணி வீரர்களுக்கு அறி​வுரைகளை​யும் வழங்கி வருகிறார். எனினும் போட்டி நடை​பெறும் நாட்​களில் தோனி மைதானத்​துக்கு வருவதை தவிர்த்து விடு​கிறார்.

இதுதொடர்​பாக நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்திப்பின் போது சிஎஸ்கே அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ரான மைக்​கேல் ஹஸ்ஸி கூறிய​தாவது: தோனி எப்​போதும் அணி​யின் நலனை விரும்​பும் வீரர். அவர், மைதானத்​துக்கு வந்​தால், அது மற்ற வீரர்​களின் கவனத்தை திசை​திருப்​பக்​கூடும் என்று கவலைப்​படு​கிறார். தோனி மைதானத்​துக்கு வந்​தால் கண்டிப்பாக கேம​ராக்​கள் அவர் மீதே இருக்​கும், ரசிகர்​கள் அவருக்​காக ஆரவாரம் செய்​வார்​கள். இதுவே தோனி போட்டி நடை​பெறும் நாட்​களில் மைதானத்​துக்கு வராமல் இருப்​ப​தன் பின்​னணி​யில் உள்ள காரணம்.

நிச்​சய​மாக அவர் ஹோட்​டல் அறை​யில் இருந்​த​படி போட்​டிகளை மிக நெருக்​க​மாக கவனித்து வரு​கிறார். தனிப்​பட்ட முறை​யில் அவர், ஓய்​வறை​யில் எங்​களு​டன் இருப்​பதை நான் மிக​வும் விரும்பு​கிறேன். தனது அனுபவங்​களை வீரர்​களுக்கு வழங்குகிறார். ஆனால், மற்ற வீரர்​களுக்கு தான் ஒரு கவனச்சிதறலாக இருக்​கக்​கூ​டாது என்​ப​தற்​காகவே, போட்டி நாளில் மட்​டும் தள்ளி இருக்க முடிவு செய்​துள்​ளார்.

தோனி களமிறங்​கு​வது மும்பை அணிக்கு எதி​ரான போட்​டியா அல்​லது அதற்கு அடுத்த போட்​டியா என்று எனக்​குத் தெரியவில்லை, ஆனால் காயத்​தில் இருந்து அவர் வேகமாக மீண்டு வருகிறார். தோனி​யின் பேட்​டிங் மற்​றும் விக்​கெட் கீப்பிங் திறன்​களின் மீது எங்​களுக்கு முழு நம்​பிக்கை இருக்​கிறது. ஆனால், ஒரு இன்​னிங்​ஸின் கடைசி கட்​டத்​தில் மிக வேக​மாக ஓடி எடுக்க வேண்​டிய ரன்​களுக்கு தேவை​யான வலிமை அவரிடம் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டியது உள்​ளது.

தனது கெண்​டைக்​கால் தசை மீது அவருக்கு முழு நம்​பிக்கை வந்தவுடன், அவர் விளை​யாடு​வதற்​குச் சம்​மதம் தெரி​விப்​பார் என்​ப​தில் நான் உறு​தி​யாக இருக்​கிறேன். தற்​போது நாங்​கள் அவரது முடி​விற்​காகவே காத்​திருக்​கிறோம். ஒட்​டுமொத்த சென்​னை​யும் காத்​திருக்​கிறது. அனைத்து ரசிகர்​களும் அவர் வரு​வார் என்று நம்பிக் காத்​திருக்​கிறார்​கள்​. இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT