கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியைத் தோற்கடித்தது. 182 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ அணி முகுல் சவுத்ரியின் அதிரடியால் கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தத் தோல்வி குறித்து கொல்கத்தா அணி வீரர் ரோவ்மன் பாவல் கூறியதாவது: லக்னோ அணியுடனான போட்டிநாங்கள் வெல்லக் கூடியதுதான். ஆனால் நடுவர் செய்த பெரும் தவறால் நாங்கள் தோல்வி அடைய நேரிட்டது. எங்கள் அணியின் தொடக்க வீரரான ஃபின் ஆலன் பேட்டிங் செய்தபோது பந்தைத் தூக்கி அடித்தார். அதை தேர்ட் மேன் திசையில் இருந்த லக்னோ வீரர் திக்வேஷ் ராதி பிடித்தார்.
இந்த கேட்ச்சில் சந்தேகம் இருந்ததால் 3-வது நடுவரிடம் கேட்கப்பட்டது. ஆனால், நடுவர் செய்த பெரும் தவறால் ஃபின் ஆலனுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இந்த விஷயத்தில், பல கோணங்களை பார்த்து ஆய்வு செய்து முடிவு எடுத்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அப்படி நடைபெறவில்லை. இது பெரும் தவறு.
இந்தத் தோல்வியால் நாங்கள் 2 புள்ளிகளை இழந்தோம்.ஐபிஎல் சாம்பியன்கள் பெரும்பாலும் தொடரின் நடுப்பகுதியிலும் இறுதிக்கட்டத்திலுமே வலுப்பெறுகின்றனர். எங்களுக்கு இந்த சீசனில் தொடக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும் இந்தப் தொடர் எங்களுக்கு எப்படி அமையப் போகிறது என்கிற விதி இன்னும் எங்கள் கைகளிலேயே உள்ளது. இன்னும் எங்களுக்கு 10 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதில் வெற்றி பெற்று மீண்டு வருவோம். இவ்வாறு ரோவ்மன் பாவல் தெரிவித்தார்.