ஹர்மன்பிரீத் கவுர்

 
விளையாட்டு

அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டால் வெற்றி: சொல்கிறார் ஹர்மன்பிரீத் கவுர்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: இலங்கை அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 தொடரில் விளை​யாடி வரு​கிறது. விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற முதல் 2 போட்​டிகளில் இந்​திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் திரு​வனந்​த​புரத்​தில் 3-வது டி20 போட்டி நடை​பெற்​றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்​பற்​றி​யுள்​ளது.

வெற்றி குறித்து இந்​திய அணி​யின் கேப்​டன் ஹர்​மன் பிரீத் கவுர் கூறும்போது, ‘‘முதல் 3 போட்​டிகளி​லுமே நாங்​கள் அபார​மாக செயல்​பட்​டோம். 3-வது ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் ஒட்​டுமொத்த சிறப்​பான செயல்​பட்​டால் வெற்​றியைச் சுவைத்​துள்​ளோம். வரும் ஜூனில் நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுவதுதான் எங்கள் இலக்கு’’ என்றார்.

SCROLL FOR NEXT