விளையாட்டு

இலங்கை கிரிக்​கெட் வாரிய தலை​வர், உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா

செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​தின் தலை​வர் ஷம்மி சில்வா, மற்றும் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர்.

இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​தின் தலை​வர் பதவிக்கு 2019-ல் தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​வர் ஷம்மி சில்​வா. இதைத் தொடர்ந்து 2021, 2023, 2025-ம் ஆண்​டு​களில் போட்​டி​யின்றி தலை​வ​ராக தேர்​வா​னார். இந்​நிலை​யில் வீரர்​களிட​மிருந்து வந்த புகார்​கள் மற்​றும் சர்​வ​தேச அரங்​கில் இலங்கை அணி​யின் மோச​மான செயல்​பாடு​களைத் தொடர்ந்​து, மார்ச் தொடக்​கத்​தில் இருந்தே சில்​வாவை பதவியி​லிருந்து நீக்​கும் நடவடிக்​கையை அரசு பரிசீலித்து வந்​தது.

இலங்கை கிரிக்​கெட் வாரி​யத் தலை​வர் பதவியி​லிருந்து விலக வேண்​டும் என்ற கோரிக்​கைகள் எழுந்த நிலை​யில், சில்வா கடந்த வாரம் இலங்கை அதிபர் அனுரா குமார திச​நாயகவை சந்​தித்​துப் பேசி​யிருந்​தார். அப்​போது பதவியி​லிருந்து வில​கு​மாறு ஷம்மி சில்​வா​விடம், அதிபர் அனுரா குமார வலி​யுறுத்​தி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று கொழும்பு நகரில் ஷம்மி சில்வா மற்​றும் வாரியத்​தின் செயற்​குழு உறுப்​பினர்​கள் பங்​கேற்ற சிறப்பு கூட்​டம் நடை​பெற்​றது. சுமார் மூன்று மணி நேரம் நீடித்த ஆலோ​சனைக்​குப் பிறகு இலங்கை கிரிக்​கெட் வாரி​யத் தலை​வர், உறுப்​பினர்​கள் அனை​வரும் பதவியி​லிருந்து வில​கு​வ​தாக அறி​வித்​தனர். இதையடுத்து இடைக்​கால குழு வாரி​யத்​தின் நிர்​வாக பணி​களை மேற்​கொள்​வதற்​கான நடவடிக்​கையை இலங்கை அரசு எடுத்​துள்​ளது.

அரசி​யல் தலை​யீடு காரண​மாக சில்வா வெளி​யேறியது குறித்து ஐசிசி எதிர்​வினை​யாற்​றக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்​பரில் அப்​போதைய இலங்கை விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் சில்​வாவை பதவியி​லிருந்து நீக்​கிய​போது, கிரிக்​கெட் வாரிய நிர்​வாகத்​தில் அரசி​யல் தலை​யீடு இருப்​பது ஐசிசி-​யின் விதி​முறை​களுக்கு எதி​ரானது எனக் கூறி, இலங்கை கிரிக்​கெட் வாரி​யத்​தின் உறுப்​பினர் தகு​தியை ஐசிசி உடனடி​யாக ரத்து செய்​தது.

அக்​கால​கட்​டத்​தில் தனது பதவி நீக்​கத்தை எதிர்த்து நீதி​மன்​றத்தில் போ​ராடி வெற்றி பெற்ற சில்​வா, மீண்​டும் பத​வி​யில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT