விளையாட்டு

2-வது டி20 போட்டியில் இந்தியா - இலங்கை மகளிர் அணி இன்று மோதல்

செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: இந்​தியா - இலங்கை மகளிர் அணி​கள் இடையி​லான 2-வது டி 20 கிரிக்​கெட் போட்டி விசாகப்​பட்​டினத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் ஹர்மன்பிரீத் கவுர் இந்​திய மகளிர் அணி 8 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 122 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 32 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்​தது. ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 44 பந்​துகளில் 69 ரன்​கள் விளாசி அசத்​தி​யிருந்​தார்.

இதே​போன்று பந்​து​ வீச்​சில் கிரந்தி கவுடு, தீப்தி சர்​மா, ஸ்ரீசரணி, வைஷ்ணவி சர்மா ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு இலங்கை அணியை குறைந்த ரன்​களுக்​குள் கட்​டுப்​படுத்​தி​யிருந்​தனர். தொடரில் இந்​திய மகளிர் அணி 1-0 என முன்​னிலை வகிக்​கும் நிலை​யில் அதே மைதானத்​தில் இன்று 2-வது ஆட்​டம் நடைபெறுகிறது. ஜெமிமா ரோட்​ரிக்​ஸிடம் இருந்து மேலும் சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும்.

அதேவேளை​யில் முதல் போட்​டி​யில் 9 ரன்​களில் ஆட்​ட​மிழந்து ஏமாற்​றம் அளித்த ஷபாலி வர்​மா, இம்​முறை கவனத்தை ஈர்க்​கும் வகை​யில் ரன்​கள் குவிக்க முயற்​சிக்​கக்​கூடும்​.

SCROLL FOR NEXT