விளையாட்டு

“அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்” - ரிகார்டோ பெரைரா

செய்திப்பிரிவு

லிஸ்பன்: இந்த உல​கக் கோப்பை கால்​பந்து தொடரில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ எதிரணி வீரர்​களை (கால்​பந்து களத்​தில்) துவம்​சம் செய்​யும் இயந்​திர​மாகவே திகழ்வார். அவர் களத்​தில் இருக்​கும் வரை, எதிரி​களுக்கு ஆபத்து எப்​போதும் காத்​திருக்​கும் என்று என்று போர்ச்​சுகல் அணி​யின் முன்​னாள் கோல்​கீப்​பர் ரிகார்டோ பெரைரா தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா, கனடா, மெக்​ஸிகோ ஆகிய 3 நாடு​களில் 2026-ம் ஆண்​டுக்​கான உலகக் கோப்பை போட்டி வரும் 11-ம் தேதி தொடங்​க​வுள்​ளது. இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கும் போர்ச்​சுகல் நட்​சத்​திர வீரர் ரொனால்​டோ, 7-வது முறை​யாக உலகக் கோப்பைப் போட்​டி​யில் பங்​கேற்​கும் முதல் வீரர் என்ற பெரு​மை​யைப் பெறவுள்​ளார்.

அர்​ஜெண்​டினா நட்​சத்​திர வீரர் லயோனல் மெஸ்​ஸிக்​கும் இது 7-வது உலகக் கோப்பை போட்​டி​யாகும். போர்ச்​சுகல் அணி​யின் கோல்​கீப்​ப​ராக இருந்த ரிகார்டோ தற்​போது பயிற்​சி​யாள​ராக மாறி வீரர்​களுக்கு பயிற்​சி​யைத் தந்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ குறித்​து, சக அணியின் முன்​னாள் வீரர் ரிகார்டோ நேற்று கூறிய​தாவது: நான் பார்த்த மிகச்​சிறந்த கால்​பந்து வீரர்​களில் கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வும் ஒரு​வர். அவர் களத்​தில் இறங்​கி​விட்​டால் அழிக்கும் இயந்​திரம் போன்று செயல்​படு​வார். அவர் களத்​தில் இருந்​தால் எதிரணி வீரர்​களுக்கு ஆபத்​து​தான். இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் அபாயகர​மான வீர​ராக திகழ்​வார் என்ப​தில் சந்​தேகமில்​லை.

இக்​கட்​டான போட்​டிகளின்​போது அதிவேகத்​தில் செயல்​பட்டு ஆட்டத்​தின் போக்கை மாற்​றக்​கூடிய​வர் ரொனால்​டோ. கால்​பந்து மைதானத்​தில அவரது அர்ப்​பணிப்​பு, ஈடு​பாடு, பேரார்​வம் ஆகியவை மாறாமல் அப்​படியே இருக்​கின்​றன. அவரது வேகம் சற்று குறைந்​திருந்​தா​லும், அது மணிக்கு 200 கிலோ மீட்டரிலிருந்து 195 கிலோ மீட்​டருக்கு மட்​டுமே குறைந்​திருக்​கிறது.

அணி வீரர்​களு​டன் சகஜ​மாக பழகக்​கூடிய​வர். சக அணி வீரர்​கள் நலமாக உள்​ளன​ரா, உடற்​தகு​தி​யுடன் உள்​ளனரா என்று விசாரிக்கும் அதே அக்​கறை அவரிடம் இப்​போதும் நீடிக்​கிறது. இந்த செயல்​பாடு​கள் அவரிடம் நீடிக்​கும் வரை, கிறிஸ்​டி​யானோ ரொனால்டோ எதிரணி வீரர்​களை (கால்​பந்து களத்​தில்) துவம்​சம் செய்​யும் இயந்​திர​மாகவே திகழ்​வார்.

அவர் களத்​தில் இருக்​கும் வரை, எதிரி​களுக்கு ஆபத்து எப்​போதும் காத்​திருக்​கும். அவரை வர்​ணிக்க இனி வார்த்​தைகளே இல்​லை. ஏனெனில், அவர் மீண்​டும் ஒரு​முறை உரு​வாக வாய்ப்பே இல்​லாத அளவுக்கு மிக​வும் தனித்​து​வ​மான ஒரு மனிதர். இவ்​வாறு ரிகார்டோ தெரி​வித்​தார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் போர்ச்​சுகல் அணி குரூப் கே-வில் காங்​கோ, உஸ்​பெகிஸ்​தான், கொலம்​பியா ஆகிய அணிகளுடன் இடம்​பெற்​றுள்​ளது. ஜூன் 17-ம் தேதி காங்கோ அணிக்​கெ​தி​ராக முதல் போட்​டி​யில் போர்ச்​சுகல் அணி விளையாட​வுள்​ளது.

ஜூன் 23-ம் தேதி உஸ்​பெகிஸ்​தானுட​னும், 27-ல் கொலம்​பியா அணிக்​கெ​தி​ராக​வும் போர்ச்​சுகல் அணி களமிறங்​க​வுள்​ளது. உலகக் கோப்பை போட்​டிக்​குத் தயா​ராவதற்​காக, போர்ச்​சுகல் அணி ஜூன் 6-ம் தேதி சிலி​யுட​னும்​, ஜூன்​ 10-ம்​ தேதி நைஜீரியாவுட​னும்​ நட்​பு ஆட்​டங்​களில்​ விளை​யாட உள்​ளது.

SCROLL FOR NEXT