விளையாட்டு

திட்​ட​மிட்டு பவுன்​ஸர்​களை வீசுவதில்லை: மனம் திறக்கும் கிருணல் பாண்​டியா

செய்திப்பிரிவு

மும்பை: பவுன்​சர்​களை வீசுவதற்கு முன்​னரே திட்டமிடுவதில்லை என்​றும், பேட்​ஸ்​மேன்​களை விட ஒரு படி முன்​னால் இருக்க தனது உள்​ளுணர்​வுக்கு ஏற்ப அந்​தப் பந்​துகளைப் பயன்​படுத்​து​வ​தாக ஆர்​சிபி அணி​யின் சுழற்​பந்து வீச்சு ஆல்ரவுண்​ட​ரான கிருணல் பாண்​டியா தெரி​வித்​துள்​ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணியை 18 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி. இந்த ஆட்​டத்​தில் 241 ரன்​கள் இலக்கை துரத்​திய மும்பை அணி​யானது 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 222 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது.

          

ஆர்​சிபி அணிக்கு இது 3-வது வெற்​றி​யாக அமைந்​தது. 4 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 3 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. அதேவேளை​யில் மும்பை அணிக்கு இது 3-வது தோல்​வி​யாக அமைந்​தது. அந்த அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 2 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 8-வது இடத்​தில் உள்​ளது.

ஆர்​சிபி அணி​யின் பந்​து​வீச்​சில் சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான கிருணல் பாண்​டியா 4 ஓவர்​களை வீசி 26 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார். நடப்பு தொடரில் கிருணல் பாண்​டியா பவுன்​ஸர்​களை வீசி பேட்​ஸ்​மேன்​களுக்கு நெருக்​கடி கொடுத்து வரு​கிறார். மும்பை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் ஆர்​சிபி அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான கிருணல் பாண்​டியா கூறிய​தாவது:

புதிய மற்​றும் வித்​தி​யாச​மான விஷ​யங்​களை முயற்சி செய்ய நான் ஒரு​போதும் தயங்​கிய​தில்​லை. இதற்கு முன்​னர் 6 அல்​லது 7-வது வரிசைகளில் ஆல்​-ர​வுண்​டர்​கள் களமிறங்​கு​வார்​கள். அப்​போது பேட்​டிங் அணுகு​முறை முற்​றி​லும் வேறாக இருந்​தது. இப்​போது, 8-வது வரிசை​யில் முழு​மை​யான பேட்​ஸ்​மேன்​கள் களமிறங்​கும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

அதோடு வீரர்​களின் திறமை​யும் அதி​கரித்​துள்​ளது. முகுல் சவுத்​ரி, வைபவ் சூர்​ய​வன்ஷி போன்ற இளம் வீரர்​கள் முதல் பந்​திலிருந்தே அதிரடி​யாக விளை​யாடு​கிறார்​கள். இதனால் ஒரு பந்​து​வீச்​சாள​ராக, எனது திறமை​யிலும் மனதள​விலும் அவர்​களை விட ஒரு படி முன்​னால் இருக்க நான் விரும்​பு​கிறேன்.

எனது பந்​து​வீச்சு சிறப்​பாக அமைவ​தில் மகிழ்ச்​சி. தட்​டை​யான ஆடு​களங்​கள் மற்​றும் 8 பேட்​ஸ்​மேன்​கள் இருக்​கும் டி20 ஆட்ட முறை​யில், சுழற்​பந்து வீச்​சாளர்​கள் தப்​பிப்​பிழைத்​து, சவால்​களைக் கடந்து சிறப்​பாகச் செயல்​படு​வார்​கள் என்று நம்​பு​கிறேன். ஏனெனில், இத்​தகைய சூழலில் ஒரு சுழற்​பந்து வீச்​சாளர் சிறப்​பாக செயல்​படு​வது மிக​வும் கடின​மாகி​விட்​டது.

நான் எனது உள்​ளுணர்வை பின்​பற்​று​பவன். நான்​காவது, ஐந்​தாவது அல்​லது ஆறாவது பந்தை பவுன்​ச​ராக வீச வேண்​டும் என்று நான் முன்​கூட்​டியே திட்​ட​மிடு​வ​தில்​லை. சில முறை நான் அடுத்​தடுத்து இரண்டு பவுன்​சர்​களை வீசுவேன். திடீரென ஓவரின் முதல் பந்​தை​யும் ஆறாவது பந்​தை​யும் பவுன்​ச​ராக வீசுவேன்.

எந்​தப் பந்தை எப்​பொழுது வீச வேண்​டும் என்​பது பெரும்​பாலும் எனது உள்​ளுணர்​வைப் பொறுத்​தது, நான் எடுக்​கும் முடி​வில் நூறு சதவீதம் உறு​தி​யாக இருந்து செயல்​படு​வேன். ரசிகர்​கள் என்​னுடைய பவுன்​சர்​களைப் பற்​றி​யும், எனது பந்​து​வீச்சு முறை​களைப் பற்​றி​யும் அதி​க​மாகப் பேசுகிறார்​கள்.

நான் எப்​போதும் எனது பந்​து​வீச்​சின் அடிப்​படை அம்​சங்​களி​லேயே கவனம் செலுத்தி வரு​கிறேன். நான் உயர​மாக இருப்​ப​தால் என்​னால் பந்தை நன்​றாக பவுன்ஸ் செய்ய முடிகிறது. அதே​போல், பந்​தைச் சுழற்​றி​யும், காற்​றில் அதன் வேகத்தை மாற்​றி​யும் பேட்​ஸ்​மேன்​களை ஆட்​ட​மிழக்​கச்​ செய்​ய முடிகிறது. இவ்​வாறு கிருணல்​ பாண்​டியா கூறினார்.

SCROLL FOR NEXT