விளையாட்டு

லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்​சாப் கிங்ஸ்?

செய்திப்பிரிவு

லக்னோ: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல் 7 ஆட்​டங்​களில் 6-ல் வெற்​றிகளை குவித்து மிரட்​டி​யிருந்​தது. இதனால் கோப்​பையை வெல்ல வாய்ப்​புள்ள அணி​களுள் ஒன்​றாக அந்த அணி இருக்​கக்​கூடும் என அனை​வ​ராலும் கருதப்​பட்​டது. ஆனால் அடுத்த 6 ஆட்​டங்​களில் அந்த அணி தொடர்ச்​சி​யாக தோல்வி அடைந்து தற்​போது பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வ​தில் சிக்​கல் எழுந்​துள்​ளது.

13 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள பஞ்​சாப் அணி 6 வெற்​றி, 6 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 13 புள்​ளி​களை பெற்று பட்​டியலில் 5-வது இடத்​தில் உள்​ளது. பிளே ஆஃப் சுற்​றுக்​கான வாய்ப்​பில் நீடிக்க வேண்​டுமென்​றால் இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கிறது பஞ்​சாப் அணி. அந்த அணி இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றாலும் அதி​கபட்​ச​மாக 15 புள்​ளி​களையே பெற முடி​யும்.

இது நிகழ்ந்​தா​லும் ராஜஸ்​தான், கொல்​கத்தா அணி​களின் கடைசி ஆட்​டங்​களின் முடிவை பொறுத்தே பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரிய​வரும். இதில் ராஜஸ்​தான் அணி 14 புள்​ளி​களை​யும், கொல்​கத்தா அணி 13 புள்​ளி​களை​யும் பெற்​றுள்​ளன. ராஜஸ்​தான் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் மும்​பை​யுட​னும், கொல்​கத்தா அணி தனது கடைசி ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யுட​னும் மோதுகின்​றன. இந்த 2 ஆட்​டங்​களும் நாளை (24-ம் தேதி) நடை​பெறுகின்​றன.

ராஜஸ்​தானும், கொல்​கத்​தா​வும் தங்​களது ஆட்​டங்​களில் தோல்வி அடைந்​தால் மட்​டுமே பஞ்​சாப் அணி அடுத்த சுற்​றுக்கு முன்​னேற முடி​யும். ராஜஸ்​தான் அணி மும்​பையை வீழ்த்​தி​னால் பஞ்​சாப், கொல்​கத்தா ஆகிய 2 அணி​களுமே தொடரில் இருந்து வெளி​யேறும். ஒரு​வேளை ராஜஸ்​தான் அணி தோல்வி அடைந்​தால் பஞ்​சாப், கொல்​கத்தா அணி​களுக்கு வாய்ப்பு கிடைக்​கும்.

இதி​லும் ஒரு சிக்​கல் உரு​வாகக்​கூடும். ராஜஸ்​தான் அணி மும்​பை​யிடம் தோல்வி அடைந்து பஞ்​சாப், கொல்​கத்தா அணி​கள் தனது கடைசி ஆட்​டத்​தில் வெற்றி கண்​டால் இந்த இரு அணி​களும் தலா 15 புள்​ளி​களை எட்​டும். அப்​போது நிகர ரன் விகிதத்தை பொறுத்தே பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் அணி எது என்​பது முடி​வாகும். தற்​போதைய சூழ்​நிலை​யில் பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் நிகர ரன் விகிதம் 0.227 ஆகவும், கொல்​கத்தா அணி​யின் நிகர ரன் விகிதம் 0.011 ஆகவும் உள்​ளது.

ஆனால், இந்த கணிப்​பு​களும் கணக்​கு​களும் வரு​வதற்கு முன்​பாக, பஞ்​சாப் அணி முதலில் தங்​களது சரி​விலிருந்து மீண்டு ஃபார்​முக்கு வர வேண்​டியது அவசி​யம். ஏனெனில், இந்​தத் தொடர் சரிவு அந்த அணி​யின் அனைத்​துப் பிரிவு​களி​லும் உள்ள பலவீனங்​களை வெளிச்​சம் போட்​டுக் காட்​டி​யுள்​ளது.

பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன் சிங், கூப்​பர் கானொலி ஆகியோரைக் கொண்ட அந்த அணி​யின் அதிரடி​யான டாப் ஆர்​டர் இந்​தத் தொடரின் முதல் பாதி​யில் கொடுத்த அதிரடி​யான தொடக்​கங்​களை தொடரின் பிற்​பகு​தி​யில் வழங்​கத் தவறி​விட்​டது. பிரியன்ஷ் ஆர்யா தனது கடைசி ஏழு இன்​னிங்​ஸ்​களில் ஒரே ஒரு அரைசதம் மட்​டுமே அடித்​துள்​ளார். அதோடு முந்​தைய போட்​டி​யில் ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தார். அதே நேரத்​தில், பிரப்​சிம்​ரன் சிங் தனது கடைசி ஐந்து இன்​னிங்​ஸ்​களில் ஒரே ஒரு அரைசதம் மட்​டுமே அடித்​து, சீரான ஆட்​டத்தை வெளிப்​படுத்த முடி​யாமல் தவித்து வரு​கிறார்.

கூப்​பர் கானொலி கிடைத்த தொடக்​கங்​களை பெரிய ரன்​களாக மாற்​றத் தவறுகிறார். கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயரும் தோல்வி அடைந்த ஆறு ஆட்​டங்​களில் ஒரே ஒரு முறை மட்​டுமே ஐம்​பது ரன்​களைக் கடக்க முடிந்​தது.

டெல்​லிக்கு எதி​ரான 265 ரன்​கள் இலக்கை வெற்​றிகர​மாக துரத்​திய பஞ்​சாப் கிங்ஸ் அணி​யின் நடு​வரிசை பேட்​டிங் தற்​போது தனது வேகத்தை இழந்​துள்​ளது. அதே நேரத்​தில், பந்​து​வீச்சு பிரி​வும் இன்​னிங்​ஸின் தொடக்​கத்​தி​லும் சரி, இறு​தி​யிலும் சரி, தொடர்ந்து ரன்​களை வாரி வழங்கி வரு​கிறது. அதோடு முக்​கிய தருணங்​களில் தவற​விடப்​பட்ட கேட்ச்​கள் பெரும் பின்​னடைவை ஏற்​படுத்​தின. மோச​மான ஃபீல்​டிங்​கும் பஞ்​சாப் அணி​யின் முன்​னேற்​றத்​துக்கு முட்​டுக்​கட்​டை​யாக மாறியது.

ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ சூப்​பர் ஜெயண்ட்​ஸ் நடப்பு தொடரில் முதல் அணி​யாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்​திருந்​தது. 13 ஆட்​டங்​களில் 9 தோல்வி​களை சந்​தித்​துள்ள அந்த அணி கடைசி ஆட்​டத்​தில்​ ஆறு​தல்​ வெற்​றி பெற்​று தொடரை நிறைவு செய்​வதில்​ கவனம் செலுத்தக்கூடும்.

SCROLL FOR NEXT