விளையாட்டு

“ஆர்சிபி அணியில் விளையாடுவது எனது ஆட்டத்திறனை மேம்படுத்தி உள்ளது” - ஜேக்கப் பெத்தெல்

வேட்டையன்

ராய்ப்பூர்: ஆர்சிபி அணியில் விளையாடுவதால் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் பேட்டிங் உட்பட எனது ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது என அந்த அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தெல் தெரிவித்துள்ளார்.

22 வயதான ஜேக்கப் பெத்தெல், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக சர்வதேச அளவில் விளையாடி வருகிறார். டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் என மூன்று பார்மெட்டிலும் முக்கிய வீரராக உள்ளார். பேட்டிங் ஆல்ரவுண்டரான அவர், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், 48 பந்துகளில் 105 ரன்களை விளாசி அசத்தி இருந்தார். தற்போது ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் 2026 சீசனில் விளையாடி வருகிறார்.

தற்போது காயமடைந்த பிலிப் சால்டுக்கு மாற்றாக ஆடும் லெவனில் ஆர்சிபி அணிக்காக அவர் விளையாடி வருகிறார். இந்நிலையில், அவர் பெஞ்சில் அமர்ந்து இருப்பதற்கு பதிலாக இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடலாம் என இங்கிலாந்து முன்னாள் வீரர் அலஸ்டர் குக் கடந்த மாதம் விமர்சித்திருந்தார். ஆனால், அதை மறுத்த மற்றொரு இங்கிலாந்து முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட வீரர்களுடன் ஆக்கப்பூர்வமான நேரத்தை செலவிடும் வாய்ப்பை பெத்தெல் பெறுவார். அது அவருக்கு பயன் தரும் என்றார்.

“ஒவ்வொருவரும் வித்தியாசமான கருத்தை கொண்டிருப்பது உண்டு. ஆனால், எனது பார்வையில் நான் சரியான முடிவை எடுத்துள்ளேன் என கருதுகிறேன். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடும் கிரிக்கெட் தொடர் இது. அந்த வகையில் இதில் விளையாடுவது எனது கிரிக்கெட் கரியரை பாதிக்காது.

ஆர்சிபி அணியில் விளையாடுவதால் மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் பேட்டிங் உட்பட எனது ஆட்டத்திறன் மேம்பட்டுள்ளது. இந்த சீசனில் நான் எதிர்பார்த்த அந்த தொடக்கம் எனக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கில் கவனம் செலுத்தி வருகிறது. அது சார்ந்து தீவிர பயிற்சியும் மேற்கொண்டுள்ளேன்” என ஜேக்கப் பெத்தெல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT