இஸ்லாமாபாத்: அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான சப்ராஸ் அகமது அறிவித்துள்ளார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக கடைசியாக விளையாடியிருந்தார்.
இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி 2 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. இந்நிலையில் நேற்று அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சர்பராஸ் அகமது அறிவித்துள்ளார். இவர், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.