விளையாட்டு

தேசிய சீனியர் பாட்​மிண்​டன்: ரித்விக் சஞ்​சீவி சாம்​பியன்

செய்திப்பிரிவு

விஜய​வாடா: தேசிய சீனியர் பாட்​மிண்​டன் போட்​டி​யில் ரித்விக் சஞ்​சீவி சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றி​யுள்​ளார்.

ஆந்​திர மாநிலம் விஜய​வாடா நகரில் 87-வது தேசிய சீனியர் பாட்​மிண்​டன் போட்​டிகள் நடை​பெற்று வந்​தன. நேற்று நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் இறு​திப் போட்​டி​யில் ஹட்​சன் பாட்​மிண்​டன் சென்​டர் வீரரும், தமிழகத்​தைச் சேர்ந்​தவரு​மான ரித்விக் சஞ்சீவியும், ஹரி​யானா வீரர் பாரத் ராக​வும் மோதினர்.

இதில் ரித்விக் சஞ்​சீவி 21-16, 22-20 என்ற புள்​ளி​கள் கணக்​கில் பாரத் ராகவை வீழ்த்தி சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்​றி​னார். முன்​ன​தாக அரை இறு​திப் போட்​டி​யில் ரித்விக் சஞ்​சீவி 21-16, 17-21, 22-20 என்ற கணக்​கில் கேரள வீரர் கிரண் ஜார்ஜை வீழ்த்தி இறு​திச் சுற்​றுக்கு முன்​னேறி​யிருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ரித்விக் சஞ்​சீ​வின் வெற்றி குறித்து அவரது பயிற்​சி​யாள​ரும், ஹட்​சன் பாட்​மிண்​டன் சென்​டரின் தலை​மைப் பயிற்​சி​யாள​ரு​மான ரஜினி​காந்த் கூறும்​போது, “இந்​தப் போட்​டித் தொடரின் ஆரம்​பத்​தில் இருந்தே ரித்விக் சஞ்​சீவி அபார​மாக விளை​யாடி வெற்றி கண்​டார். அவரது ஆட்​டத்​தில் இருந்த ஒழுங்​கும், முக்​கிய நேரங்களில் அவர் குவித்த புள்​ளி​களும் அவர் சாம்​பியன் பட்​டம் வெல்ல உதவி​யாக இருந்​தன. போட்​டிக்​காக அவர் பெற்ற பயிற்சியும், அதை சரி​யான நேரத்​தில் சிறப்​பாக செயல்படுத்தியதுமே வெற்​றிக்​கு காரண​மாக அமைந்​தன” என்றார்​.

SCROLL FOR NEXT