சென்னை: நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ராமகிருஷ்ணா கோஷ் காயம் காரணமாக விலகியிருந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான 24 வயதான மேக்நீல் நோரோன்ஹாவை ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே அணி.
2024-25-ம் ஆண்டு சீசனில் நடைபெற்ற கர்னல் சி.கே. நாயுடு கோப்பை (யு-23) தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்காக பிசிசிஐ-யின் மதிப்புமிக்க எம்.ஏ.சிதம்பரம் விருது மேக்நீல் நோரோன்ஹாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சையது முஸ்டாக் அணி டி 20 தொடரில் கார்நாடகா அணிக்காக விளையாடும் வாய்ப்பு மேக்நீல் நோரோன்ஹாவுக்கு கிடைத்தது. அந்தத் தொடரில் அவர், 3 ஆட்டங்களில் விளையாடி இருந்தார்.