பாங்காக்: தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியா வின் கிரண் ஜார்ஜ் 21-15, 21-9 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் ஷோலே ஐடிலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற இந்திய வீரர்களான மஞ்சுநாத் 21-12, 9-21, 21-17 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்சனையும், தருண் மன்னேபள்ளி 22-20, 21-17 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் காந்தஃபோன் வாங்காரோயனையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.