விளையாட்டு

பாட்​மிண்​டன்: இறுதிப் போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

செய்திப்பிரிவு

லக்னோ: சையது மோடி சர்​வ​தேச பாட்​மிண்​டன் தொடர் லக்னோ​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் அரை இறுதி​யில் இந்​தி​யா​வின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-15, 19-21, 21-13 என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த மிதுன் மஞ்​சு​நாத்தை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். இன்று நடைபெறும் இறு​திப் போட்​டி​யில் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஹாங் காங்கின் ஜேசன் குன​வானுடன் மோதுகிறார்.

மகளிர் இரட்​டையர் பிரிவு அரை இறு​தி​யில் நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா​வின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபி சந்த் 21-11, 21-15 என்ற செட் கணக்​கில் மலேசி​யா​வின் ஓங் ஜின் யீ, கார்​மென் டிங் ஜோடியை தோற்​கடித்​தது. இன்று நடை​பெறும் இறு​திப் போட்டியில் ஜப்​பானின் கஹோ ஒசா​வா, மை தனபே ஜோடி​யுடன் பலப்பரீட்சை நடத்​துகிறது.

மகளிர் ஒற்​றையர் பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் உன்​னதி ஹூடா 15-21,10-21 என்ற நேர் செட் கணக்​கில் துருக்​கி​யின் நெஷ்லி ஹான் அரினி​யிட​மும், தன்வி சர்மா 17-21, 16-21 என்ற செட் கணக்​கில் ஜப்​பானின் ஹினா அகேச்​சி​யிட​மும் தோல்வி அடைந்​தனர்​.

SCROLL FOR NEXT