விளையாட்டு

​கா​யம் காரண​மாக கலீல் அகமது வில​கல்

செய்திப்பிரிவு

சென்னை: தசை​நார் முறிவு காரண​மாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி​யின் வேகப்​பந்து வீச்​சாளர் கலீல் அகமது இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வில​கி​யுள்​ளார். சிஎஸ்கே - கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​கள் கடந்த 14-ம் தேதி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் மோதின. இந்த ஆட்டத்​தில் சிஎஸ்கே 32 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இந்த ஆட்​டத்​தின் 17-வது ஓவரை சிஎஸ்கே வேகப்​பந்து வீச்சாள​ரான கலீல் அகமது வீசிய போது வலது இடுப்பு பகுதி​யில் தசை​நார் முறிவு ஏற்​பட்​டது. இதனால் அவர், களத்​தில் இருந்து உடனடி​யாக வெளி​யேறி​னார். கலீல் அகமதுக்கு ஏற்​பட்​டுள்​ளது இரண்​டாம் நிலை தசை​நார் முறிவு ஆகும்; இதிலிருந்து மீண்டு வர குறைந்​தது 10-12 வாரங்​கள் ஆகும். இதனால் ஐபிஎல் தொடரில் முழுமையாக கலீல் அகமது வில​கி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT