ஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார். ஜகார்த்தாவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான பி.வி.சிந்து 25-23, 21-16 தாய்லாந்தின் புசனான் ஓங்பாம்ருங்பனை வீழ்த்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிடாம்பி காந்த் 19-21, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யுஷி தனகாவிடமும், இந்திய வீரர் லக்சயா சென் 19-21, 16-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் அல்வி ஃபர்ஹானிடமும் தோல்வி கண்டு வெளியேறினர்.