விசாகப்பட்டினம்: இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்து. இரு அணிகள் இடையிலான முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்திய மகளிர் அணி ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பங்கேற்கும் முதல் தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை கட்டமைக்க உதவியாகவும் தற்போதைய இலங்கை தொடர் அமையக்கூடும். இதனால் இளம் பேட்டரான தமிழகத்தைச் சேர்ந்த ஜி.கமலினி, இடது கை சுழற்பந்து வீச்சாளரான வைஷ்ணவி சர்மா உள்ளிடோருக்கு இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.