விளையாட்டு

இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இன்று 5-வது டி20 போட்டியில் மோதல்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இன்று 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளன.

இந்தப் போட்டி திருவனந்தபுரம் கிரீன்பீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்தத் தொடரை இந்திய மகளிர் அணி ஏற்கெனவே வென்றுவிட்டது. இருப்பினும் தொடரை முழுமையாக கைப்பற்றுவதற்கு ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முயற்சிக்கக்கூடும். அதே நேரத்தில் ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் இலங்கை மகளிர் அணி களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT