விளையாட்டு

இந்திய ஓபன் பாட்மிண்டன்: அன் சே-யங் சாம்பியன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்​டி​யின் மகளிர் ஒற்றையர் பிரி​வில் தென் கொரிய வீராங்​கனை அன் சே-​யங் சாம்பியன் பட்​டம் வென்​றார்.

இந்​திய ஓபன் பாட்​மிண்​டன் போட்டி டெல்லி இந்​திரா காந்தி ஸ்டேடியத்தில் நடை​பெற்று வந்​தது. நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் சீனா​வின் வாங் ஜியுடன், தென்​கொரி​யா​வின் அன் சே-​யங் மோதினர். இதில் தென்​கொரிய வீராங்​க​னை​யின் ஆட்​டத்​துக்கு வாங்ஜியி-​யால் ஈடு​கொடுக்க முடிய​வில்​லை. இதனால் அன் சே-​யங் 21-13, 21-11 என எளி​தாக வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

இந்​தி​யன் ஓபன் பாட்​மிண்​டன் போட்​டி​யில், இவர் ஏற்​கெனவே 2023-ம் ஆண்டு சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தார். கடந்த ஆண்​டும் சாம்​பியன் பட்டம் வென்ற நிலை​யில், தற்​போது தொடர்ந்து 2-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றுள்​ளார்.

மொத்​தம் 3 முறை இந்​திய ஓபன் பாட்​மிண்​டன் பட்​டத்தை அவர் கைப்​பற்​றி​யுள்​ளார். ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் சீன தைபேயைச் சேர்ந்த லின் சுன்​-​யி, இந்​தோ​னேசி​யா​வைச் சேர்ந்த ஜோனதன் கிறிஸ்​டியை எதிர்​கொண்​டார். இதில் லின் 21-10, 21-18 என வெற்றி பெற்று சாம்​பியன் பட்டத்தைக்​ கைப்​பற்​றி​னார்​.

SCROLL FOR NEXT