கோப்புப் படம்

 
விளையாட்டு

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தியா - வங்​கதேசம் மகளிர் அணி​கள் இடையே நடை​பெற இருந்த ஒரு​நாள் போட்டி மற்​றும் டி 20 தொடர் ஒத்​திவைக்​கப்​பட்​டுள்​ளது.

வங்​கதேச மகளிர் கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளை​யாட திட்​ட​மிட்டு இருந்​தது. கொல்​கத்தா, கட்​டாக்​கில் போட்டிகளை நடத்த ஏற்பாடு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த தொடர் ஒத்​திவைக்​கப்​பட்​டுள்​ள​தாக பிசிசிஐ அறி​வித்​துள்​ளது. டிசம்​பரில் மாற்​றுத் தொடரை நடத்த முயற்​சித்து வரு​கிறோம் எனவும் வங்​கதேச தொடரை திட்​ட​மிட்​டபடி நடத்த முடி​யாது எனவும் பிசிசிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

வங்​கதேச கிரிக்​கெட் வாரிய அதி​காரி​கள் கூறும்​போது, “தொடர் ரத்து செய்​யப்​பட்​டது தொடர்​பாக பிசிசிஐ-​யிட​மிருந்து எங்​களுக்கு கடிதம் வந்​துள்​ளது. புதிய தேதிக்​காக காத்​திருக்​கிறோம்” என்​றனர். கடந்த ஆகஸ்ட்டில் இந்​திய ஆடவர் அணி, வங்​கதேசம் சென்று விளை​யாட இருந்த தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்​திவைக்​கப்​பட்​டு இருந்​தது.

SCROLL FOR NEXT