பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 56-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் ஜூவான் மானுவல் செருண்டோலோவை எதிர்த்து விளையாடினார். முதல் 2 செட்களையும் ஜன்னிக் சின்னர் 6-3, 6-2 என எளிதாக கைப்பற்றினார்.
3-வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஜூவான் மானுவல் செருண்டோலோ அந்த செட்டை 7-5 என தன்வசப்படுத்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. இதன் பின்னர் அடுத்த 2 செட்களிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஜூவான் மானுவல் செருண்டோலோ 6-1, 6-1 என கைப்பற்றி ஜன்னிக் சின்னருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
முடிவில் 3 மணி நேரம் 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜூவான் மானுவல் செருண்டோலோ 3-6, 2-6, 7-5, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ஜன்னிக் சின்னரை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 16-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 72-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்கை எதிர்கொண்டார். இதில் நவோமி ஒசாகா 7-6 (7-1), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.