கோல் பதிவு செய்ததை கொண்டாடிய ஈக்வேடார் அணி வீரர்கள், பார்வையாளர்கள்
நியூயார்க்: நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனியை ஈக்வேடார் அணி வீழ்த்தியது. மறுபக்கம் நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் பிரேசில் உடன் ஜப்பான் பலப்பரீட்சை செய்கிறது.
இந்த தொடரில் பங்கேற்றுள்ள 48 அணிகளும் முதல் சுற்றில் அதன் கடைசி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. இதில் குரூப்-ஏ முதல் எஃப் வரையில் இடம்பெற்றுள்ள அணிகள் தலா 3 ஆட்டங்களில் விளையாடி விட்டன. இன்னும் ஜி, ஹெச், ஐ, ஜே, கே, எல் ஆகிய பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள் முதல் சுற்றின் கடைசி ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. வரும் 28-ம் தேதி உடன் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைகிறது. இதனால் உலகக் கோப்பை தொடர் அதன் வழக்கமான பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது.
ஜெர்மனி vs ஈக்வேடார்
குரூப்-இ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஈக்வேடார் அணிகள் இடையிலான ஆட்டம் ஈஸ்ட் ரூதர்போர்டில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஜெர்மனியின் சனே கோல் பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதற்கான பதில் கோலை அடுத்த 7-வது நிமிடத்தில் ஈக்வேடார் அணியின் நில்சன் பதிவு செய்தார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது.
தொடர்ந்து ஆட்டத்தின் 77-வது நிமிடத்தில் ஈக்வேடாரின் கெவின் ரோட்ரிக்ஸ் கொடுத்த பாஸை கோலாக மாற்றி இருந்தார் கோன்சாலோ. இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் ஈக்வேடார் அணி ஆட்டத்தில் முன்னிலை பெற்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஈக்வேடார் விளையாடியது. ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இதன் மூலம் 2006-க்கு பிறகு நாக்-அவுட் சுற்றுக்கு அந்த அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து அந்த நாட்டில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் உடன் ஜப்பான் பலப்பரீட்சை
குரூப்-எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. இதன் மூலம் மூன்று ஆட்டங்களில் 1 வெற்றி, 2 டிரா உடன் குரூப் சுற்றில் இரண்டாம் இடம் பிடித்த ஜப்பான் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதே பிரிவில் இருந்து நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
நாக்-அவுட் சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றில் ஜப்பான் அணி, பிரேசில் உடன் விளையாடுகிது. இந்த ஆட்டம் வரும் 29-ம் தேதி நடைபெற்றது. நெதர்லாந்து அணி, மொராக்கோவை வரும் 30-ம் தேதி எதிர்கொள்கிறது
நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு (நாக்-அவுட்) இதுவரை 19 அணிகள் முன்னேறி உள்ளன.
அதன் விவரம்: மெக்சிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, கனடா, பிரேசில், மொராக்கோ, போஸ்னியா & ஹெர்சகோவினா, தென் ஆப்பிரிக்கா, ஐவரி கோஸ்ட், ஈக்வேடார், நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இன்னும் 13 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டி உள்ளது.