பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக் தகுதி பெற்றுள்ளார்.
இந்தப் போட்டிகள் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் தேவிகா சிஹாக்கும், சீன தைபே வீராங்கனை ஹுவாங் யு-சுன்னும் மோதினர்.இதில் தேவிகா சிஹாக் 22-20, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.