கோப்புப் படம்

 
விளையாட்டு

சென்​னை​யில் நடந்த சைக்ளோத்தான் போட்டி!

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு சைக்​கிள் ஓட்​டு​தல் சங்​கத்​துடன் இணைந்து எலிஃபண்​டைன் சர்க்​யூட் நடத்​திய சைக்​ளோத்​தான் நிகழ்ச்சி சென்னை அடை​யாறு பகு​தி​யில் நேற்று காலை நடைபெற்​றது.

சைக்​ளோத்​தான் போட்​டியை ஓய்​வு​பெற்ற போலீஸ் டிஜிபி சைலேந்​திர பாபு, எலிஃபண்​டைன் நிர்​வாக இயக்​குநர் ரமணன் பால​கங்​காதரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கலா அறக்​கட்​டளை​யைச் சேர்ந்த 35 மனநலம் பாதிக்கப்​பட்​ட​வர்​கள் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றனர். அவர்​களில் ஒரு​வர் 8 மாத கர்ப்​பிணி ஆவார். அவர் தனது கணவருடன் பங்கேற்​றார். மேலும், சென்னை முழு​வ​தி​லும் இருந்து 400-க்​கும் மேற்​பட்​டோர் சைக்​ளோத்​தான் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றனர்.

நிகழ்ச்​சி​யில் சைலேந்​திர பாபு பேசி​ய​தாவது: சைக்​ளோத்​தான் நிகழ்ச்சி மனதுக்கு மகிழ்ச்சி தரும். உற்​சாகம் தரும். மேலும் இதன் மூலம் சாதனை​கள் இந்​திய அளவிலும் உலக அளவிலும் நிகழும். உண்​மை​யான உடல் தகுதியோடு இருக்​கக்​கூடிய விளையாட்டு சைக்​கிள் பந்​த​யம்​தான். இதில் பங்​கேற்​கும் உடலும், மனதும் உறு​தி​யாகும். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT