விளையாட்டு

உண்மையான ஆல்ரவுண்டர்! - பீல்டிங், பேட்டிங் கலக்கலில் ரிங்கு சிங்!

ஆர்.முத்துக்குமார்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகத்தின் மோசமான சிந்தனையினால் வீணாக்கப்பட்ட ரிங்கு சிங் கடந்த 3 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததோடு மொத்தமாகவே நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த இன்னிங்ஸிற்கு முன்பாக 94 பந்துகளில் 98 ரன்களையே எடுத்திருந்தார்.

நேற்று அணியில் தன் இன்றியமையாமையை நிரூபித்தார். பந்து வீச்சு, பீல்டிங் பேட்டிங் என்று ஆடினால்தான் ஆல்ரவுண்டர் என்று பொருளல்ல, நேற்று ரிங்கு சிங் 5 கேட்ச்களுடன் அபார பேட்டிங்கையும் நெருக்கடியில் வெளிப்படுத்தியதால் உண்மையான ஆல்ரவுண்டர் தான் என்பதை காட்டினார்.

நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா சூப்பர் ஓவரில் வெற்றி பெற இருவர்தான் காரணம் முதலில் சுனில் நரைனின் அற்புதமான 2 விக்கெட் ஓவர். ரிங்கு சிங்கின் கேட்சிங். ஆட்டம் முழுவதுமே ரிங்கு சிங் நேற்று பங்களிப்பு செய்தார். அதுவும் 19 ஓவர்களில் கொல்கத்தா அணி 129/7 என்றுஇருந்தது. அப்போதுதான் ரிங்கு சிங் எழுச்சி பெற்றார்.

திக்வேஷ் ராத்தியின் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை விளாசி அந்த ஓவரில் 26 ரன்களைக் குவித்து ஸ்கோரை 155 என்ற நிலைக்கு உயர்த்தினார். ரிங்கு சிங் 51 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என்று 83 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மாறாக லக்னோ அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது கிரீசில் ஹிம்மத் சிங்கும், ஷமியும் இருந்தனர்.

அடுத்தடுத்து கார்த்திக் தியாகி நோ-பால்களை வீசினாலும் பவுண்டரி ஒன்றைக் கொடுத்தாலும் ஹிம்மத் விக்கெட்டைக் காலி செய்ததோடு கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஷமி தன் பேட்டிங் திறமையைக் காட்டி லாங் ஆஃபில் சிக்ஸ் விளாசி போட்டியை டை ஆக்கி சூப்பர் ஓவருக்கு நகர்த்தினார். சூப்பர் ஓவர் முதல் ஓவரிலேயே நரைன் கலக்க உப்புச் சப்பின்றி 2 விக்கெட்டுகள் விழ 1 ரன்னையே எடுத்தது லக்னோ. அதுவும் நிகலஸ் பூரனுக்கு நரைன் வீசிய அற்புதமான பந்தில் ஆஃப் ஸ்டம்ப் பெயர்ந்தது.

ரிஷப் பண்ட் ஒரு சிங்கிள் எடுக்க அய்டன் மார்க்ரம் பந்தை தூக்கி அடித்தார். ரோவ்மென் போவெல் பந்தை பிடித்தார், ஆனால் பவுண்டரியைக் கடந்து விடுவோம் என்று பந்தை விளையாட்டு எல்லைக்குள் தட்டி விட ரிங்கு சிங் அதைப் பிடித்தார் மார்க்ரம் அவுட். இது இந்தப் போட்டியில் ரிங்கு சிங்கின் 5-வது கேட்ச். பிறகு சூப்பர் ஓவரில் ஓப்பனிங்கில் இறங்கிய ரிங்கு சிங் பவுண்டரி விளாசி கொல்கத்தாவை வெற்றிக்கு இட்டுச் சென்று ஆட்ட நாயகன் பரிசை வென்றார்.

ரிங்கு சிங் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஓவர்களில் 73/6 என்றும் பிறகு ரமந்தீப் சிங் ஆட்டமிழக்க ஸ்கோர் 93/7 என்று ஆனது. இன்னொரு தோல்விதான் என்ற நிலையில் ரிங்கு சிங் அணியை மீட்டார். ரிங்கு சிங் முதலில் நிதானமாக ஆடி 40 பந்துகளில் 43 ரன்களையே எடுத்திருந்தார், ஆனால் இது ஒரு முக்கியமான இன்னிங்சின் அங்கம் என்று அப்போது எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

19 வது ஓவரை ஷமி வீச ரிங்கு அவரை 6.4, 4 என்று விளாசினார். பிறகு 20வது ஓவரில் திக்வேஷ் ராத்தியை பின்னி எடுத்து 4 சிக்சர்களுடன் 26 ரன்கள் அந்த ஓவரில் வர கொல்கத்தா 155 ரன்களை எட்டியது பிறகு இதுவே வெற்றி ஸ்கோராக மாறியது. பவுலிங் போடாவிட்டால் என்ன ரிங்கு சிங் தன் பீல்டிங் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார், அதோடு நெருக்கடியான தருணங்களில் மேட்ச் வின்னிங்ஸ் இன்னிங்சையும் ஆடிக்கொடுக்கிறார். நிச்சயம் ரிங்கு சிங் ஓர் ஆல்ரவுண்டர்தான்.

SCROLL FOR NEXT