சென்னை: வரும் 31-ம் தேதி 16-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இதுவரை நடந்து முடிந்துள்ள 15 ஐபிஎல் சீசன்களில் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேன்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக இந்த ஆரஞ்சு கேப் உள்ளது. இதனை 2008 முதல் கடந்த 2022 வரையில் பல்வேறு பேட்ஸ்மேன்கள் வென்றுள்ளனர்.
ஆரஞ்சு கேப் வென்றவர்கள்..
- 2008: ஷான் மார்ஷ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
- 2009: மேத்யூ ஹேடன் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
- 2010: சச்சின் டெண்டுல்கர் (மும்பை இந்தியன்ஸ்)
- 2011: கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
- 2012: கிறிஸ் கெய்ல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
- 2013: மைக்கேல் ஹஸ்ஸி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
- 2014: ராபின் உத்தப்பா (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
- 2015: டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
- 2016: விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
- 2017: டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
- 2018: கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
- 2019: டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
- 2020: KL ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
- 2021: ருதுராஜ் கெய்க்வாட் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
- 2022: ஜோஸ் பட்லர் (RR)
- 2023: ?