கேப் டவுன்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது அணி அணி.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்த அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. பூஜா வஸ்த்ரகர், இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடவில்லை.
பவர்பிளே ஓவர்களில் அபாரமாக பேட் செய்தது ஆஸ்திரேலிய அணி. மிடில் ஓவரில் ரன் குவிப்பு சற்றே கட்டுப்படுத்தப்பட்டது. இருந்தும் கடைசி 5 ஓவர்களில் 59 ரன்களை குவித்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 172 ரன்களை எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பீல்டிங்கில் சொதப்பி இருந்தது. கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டி வருகிறது. 4 ஓவர்களுக்குள் ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா மற்றும் யாஸ்திகா விக்கெட்டுகளை இந்தியா இழந்துள்ளது. மூவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி உள்ளனர்.