சென்னை: தமிழ்நாடு ஜூனியர் (17 மற்றும் 19வயதுக்கு உட்பட்டோர்) மாநில ரேங்கிங் பாட்மிண்டன் தொடர் திருப்பூரில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுமியர் ஒற்றையர் பிரிவில் ஹட்சன் பாட்மிண்டன் பயிற்சி மையத்தைச் சேர்ந்த ரெஷிகா 21-8, 21-11 என்ற நேர் செட்டில் ஆதர்ஷினி ஸ்ரீயை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதேபோன்று இரட்டையர் பிரிவில் மதுமிதா மதன்குமாருடன் இணைந்து தங்கப் பதக்கத்தையும், கலப்பு இரட்டையர் பிரிவில் சுவஷ்டிக்குடன் இணைந்து தங்கப் பதக்கத்தையும் வென்றார் ரெஷிகா. 19 வயதுக்குட்பட்டோருக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் ரீவா இவாஞ்சலின், பரத் சஞ்ஜெய் ஜோடி தங்கம் வென்றது. மேலும் மகளிர் இரட்டையர் பிரிவில் ரீவா இவாஞ்சலின், மதுமிதா மதன் குமாருடன் இணைந்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.