ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் கே.எல்.ராகுல். அணியை திறம்பட வழிநடத்தி கேப்டனாக தனது முதல் வெற்றியை இந்தத் தொடரில் அவர் பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அவரது கேப்டன்சி குறித்த சில புள்ளி விவரங்களை தெரிந்து கொள்வோம்.
இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. நாளை ( ஆகஸ்ட் 18) முதல் வரும் 22-ம் தேதி வரையில் இந்தத் தொடருக்கான போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழி நடத்தவுள்ளார்.
முன்னதாக, இந்தத் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டிருந்தார். இருந்தும் கே.எல்.ராகுல் தனது உடற்திறனை நிரூபித்தக் காரணத்தால் அணியில் இடம்பிடித்தார். அதோடு கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். கடந்த 2016 ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுக வீரராக களம் கண்டார் ராகுல். இப்போது அதே அணிக்கு எதிராக கேப்டனாக செயல்பட உள்ளார்.
கே.எல்.ராகுலும் கேப்டன்சியும்