மாணவி சஹானா 
விளையாட்டு

தேசிய உயரம் தாண்டுதல் போட்டியில் வ.உ.சி. கல்லூரி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவி சஹானா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

பெடரேஷன் கோப்பைக்கான 20 வயதுக்கு உட்பட்ட 20-வது தேசிய அளவிலான போட்டிகள் குஜராத்தில் உள்ள சோட்டா பாய் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வஉசி கல்லூரி ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு மாணவி சஹானா 1.64 மீட்டர் உயரம் தாண்டி இந்திய அளவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

சஹானாவை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி பேட்ரிக், மாவட்ட தடகளச் செயலாளர் பழனிச்சாமி, வஉசி கல்லூரி செயலாளர் ஏபிசி சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு, உடற்கல்வி இயக்குநர் சிவஞானம் ஆகியோர் பாராட்டினர்.

SCROLL FOR NEXT