தெற்காசிய விளையாட்டில் மல் யுத்தத்தில் இந்தியாவின் சாக் ஷி மாலிக் தங்கப் பதக்கம் வென்றார்.
நேபாளத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மகளிருக் கான ஹேண்ட்பால் இறுதி சுற்றில் நேற்று இந்தியா - நேபாளம் அணி கள் மோதின.
இதில் இந்திய மகளிர் மணி 35-21 என்ற கணக் கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. அதேவேளை யில் ஆடவர் பிரிவில் இந்திய அணி 29-30 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
மல்யுத்தத்தில் மகளிருக்கான 62 கிலோ எடைப் பிரிவில் சாக் ஷி மாலிக்கும், 59 கிலா எடைப் பிரிவில் அன்ஷுவும் ஆடவருக்கான 61 கிலோ எடைப் பிரிவில் ரவீந்தரும், 86 கிலோ எடைப் பிரிவில் பவன் குமாரும் தங்கப் பதக்கம் வென்றனர்.
பதக்க பட்டியல்
7-வது நாளின் முடிவில் இந் தியா 132 தங்கம், 79 வெள்ளி, 41 வெண்கலம் என 252 பதக்கங் களுடன் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தியது. நேபாளம் 45 தங்கம், 44 வெள்ளி, 76 வெண் கலம் என 165 பதக்கங்களுடன் 2-வது இடம் வகிக்கிறது.