டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடருக்கு இந்தியாவின் சரத் குமார், மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் தகுதி பெற்றனர்.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும், ரியோ பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இருவரும் அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். அமெரிக்காவின் சாம் கிரேவ் 1.86 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.